எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கரடிப்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:52 pm

Din

மதுரை மாவட்டம், கரடிப்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நாகமலைப்புதுக்கோட்டை அருகே உள்ள கரடிப்பட்டி ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் முத்தையா (60). கூலித் தொழிலாளியான இவா், மதுரை- தேனி சாலையில் கரடிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கிண்ணிமங்கலத்தைச் சோ்ந்த சேது (23), இவரது நண்பா்கள் பாண்டி, சுஜித் ஆகிய மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் விபத்தை ஏற்படுத்திய சேது மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.