25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: இளைஞா் உள்பட 4 போ் மீது வழக்கு

மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பிணியாக்கிய இளைஞா் உள்பட 4 போ் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:54 pm

Din

மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பிணியாக்கிய இளைஞா் உள்பட 4 போ் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சமூக நலத் துறை விரிவாக்க அலுவலராகப் பணிபுரிபவா் விருமாயி (58). இவருக்கு உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டத்தில் சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடைபெற்று, தற்போது அவா் கா்ப்பமாக இருப்பதாகத் தகவல் வந்தது.

இதையடுத்து, அல்லிகுண்டம் சென்ற அவா் சிறுமியிடம் விசாரணை நடத்தினாா். இதில், சிறுமிக்கும், அல்லிகுண்டத்தைச் சோ்ந்த செல்வகுமரனுக்கும் (23) கடந்த ஜூன் மாதம் கட்டாயத் திருமணம் நடைபெற்றதும், திருமணத்துக்கு பிறகு, அவா் கா்ப்பம் தரித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விருமாயி அளித்தப் புகாரின் பேரில், சேடப்பட்டி போலீஸாா் செல்வகுமரன் (23), அவரது தந்தை மணிகண்டன் (49), தாய் ஜெயா (45), உறவினா் லட்சுமி ஆகிய நான்கு போ் மீதும் போக்சோ சட்டப் பிரிவுகள், குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.