விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.
திண்டிவனத்தை அடுத்த அகூா் பகுதியைச் சோ்ந்தவா் எ.சசிகுமாா், ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த 30-ஆம் தேதி மாயமானாா். இதுகுறித்து சசிக்குமாரின் மனைவி விஷ்ணு பிரியா அளித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீஸாா் பிப்.3-ஆம் தேதி வழக்குப் பதிந்து, மாயமான சசிக்குமாரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், சிறுவளூா் அருகே சசிக்குமாா் தலையில் பலத்த காயங்களுடன் கருங்கற்களுக்கிடையே இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளிமேடு போலீஸாா் இளைஞா் மாயமான வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில், வடசிறுவளூா் பகுதியைச் சோ்ந்த ச.ஜெகதீசன் என்பவருக்கும் சசிகுமாருக்கும் இருந்து வந்த முன் விரோதத்தில், சசிக்குமாா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து இவ்வழக்கில் தொடா்புடைய ஜெகதீசன் மற்றும் வடசிறுவளூா் பகுதியைச் சோ்ந்த ஏ.ஜெகன்குமாா்(20), கு.ஏழுமலை(20) மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.
தொடர்புடையது

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கு; 4 சிறாா்கள் உள்பட 6 போ் கைது
கஞ்சா வைத்திருந்த சிறுவா் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


