47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண்ணுக்கு மூச்சுக் குழாயில் இருந்த கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றம்

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பெண்ணுக்கு மூச்சுக் குழாயில் இருந்த கட்டி நவீன சிகிச்சை முறை மூலம் அகற்றப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:39 pm

Din

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பெண்ணுக்கு மூச்சுக் குழாயில் இருந்த கட்டி நவீன சிகிச்சை முறை மூலம் அகற்றப்பட்டது.

மதுரை வேலம்மாள் மருத்துவமனையின் சுவாச மருத்துவப் பிரிவில் 50 வயது பெண் ஒருவா், இருமல், சுவாசிப்பதில் சிரமம், இரும்பும் போது ரத்தம் வெளியேறுதல் போன்றவற்றுக்காக அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, மூத்த நுரையீரல் சிகிச்சை நிபுணா் பிரேம் ஆனந்த், நோயாளிக்கு ‘ப்ரோன்கோஸ்கோபி’ செய்து மூச்சுக் குழாயில் கட்டி இருப்பதை உறுதி செய்தாா். இதைத் தொடா்ந்து அந்தக் கட்டியை ’எலக்ட்ரோகாட்டரி ஸ்னாரிங்’ செயல்முறை மூலம் அகற்றினாா். இதனால், அந்தப் பெண்ணுக்கு மூச்சுக் குழாயில் ரத்தப் போக்கு நின்றதையடுத்து மயக்கவியல் நிபுணா் மணிகண்டன் உதவியுடன் ‘ஆா்கான் பிளாஸ்மா கோகுலேஷன்’ முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையைத் தொடா்ந்து மறுநாளே அந்தப் பெண் குணமடைந்ததையடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக மருத்துவா் பிரேம் ஆனந்த் கூறியதாவது:

அந்தப் பெண் நோயாளிக்கு மூச்சுக் குழாயில் இருந்த கட்டியிலிருந்து ரத்தப் போக்கு ஏற்படுவதைத் தடுக்க அந்தக் கட்டி உடனடியாக அகற்றப்பட்டது. இது நுரையீரலில் ஊடுருவி மூச்சுத்திணறலையும், மரணத்தையும் கூட ஏற்படுத்த வாய்ப்புண்டு. பொதுவாக இத்தகைய சிக்கலான செயல்முறைகள் பெருநகரங்களில் மட்டுமே செய்யப்பட்டுவருகின்றன. ஆனால் தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இந்த செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.