மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

மதுரை கோச்சடை பகுதியில் வாகனத்தில் ரூ. 15 கோடி மதிப்புள்ள 951 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில், 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 7:52 pm

Din

மதுரை கோச்சடை பகுதியில் வாகனத்தில் ரூ. 15 கோடி மதிப்புள்ள 951 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில், 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கோச்சடை பகுதியில் கடந்த 15.2. 2023 அன்று எஸ்.எஸ். காலனி போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். லாரியில் ரூ. 15 கோடி மதிப்புள்ள 951 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், மதுரை மேலமாசி வீதி, சீனிவாசபிள்ளை தெருவைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் பிரபாகரன் (23), எல்லீஸ்நகா் பால்பாண்டி மகன் ராஜ்குமாா் (34), கோவை பீளமேடு பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் செந்தில் பிரபு (37), மதுரை கோ. புதூா் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மகன் ஜெயக்குமாா் (36) (தற்போது ஒடிஸா மாநிலத்தில் வசித்து வருகிறாா்) ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். ஹரிஹரகுமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, லாரியில் 951 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது குறித்து அரசுத் தரப்பில் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி ஹரிஹரகுமாா் பிறப்பித்த உத்தரவு:

லாரியில் கஞ்சா கடத்திய வழக்கில் பிரபாகரன் உள்பட 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.