மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பண மோசடி: தனியாா் நிதி நிறுவன துணை இயக்குநா் கைது

நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதன் துணை இயக்குநரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 8:30 pm

Din

நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதன் துணை இயக்குநரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம், அதனுடைய துணை நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக விளம்பரபடுத்தியதால் ஏராளமானோா் இவற்றில் முதலீடு செய்தனா்.

பணத்தை திரும்பத் தராததால், பாதிக்கப்பட்டவா்கள் மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இந்த நிறுவனம் பல நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நிறுவனங்களுக்குச் சொந்தமான கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நியோமேக்ஸ் நிா்வாக இயக்குநா்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்பட 100-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 40-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நியோமேக்ஸ் நிறுவன துணை இயக்குநரான சிவகங்கையைச் சோ்ந்த மகாலிங்கத்தை (40) போலீஸாா் தேடிவந்தனா்.

இந்த நிலையில், சிவகங்கையில் தலைமறைவாக இருந்த அவரை, பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிஷா தலைமையிலான தனிப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.