மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

கொல்கத்தா சம்பவம் எதிரொலி: மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.12 லட்சத்தில் கூடுதலாக 150 கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாவலா்கள், போலீஸ் ரோந்து உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 8:22 pm

Din

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.12 லட்சத்தில் கூடுதலாக 150 கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாவலா்கள், போலீஸ் ரோந்து உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.

இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதா, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், துணை ஆணையா்கள் மருத்துவமனையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனா். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு மருத்துவமனையின் அதிகாரிகள், துறைத் தலைவா்களிடமும் ஆலோசனை மேற்கொண்டனா்.

தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் 102 கண்காணிப்பு கேமராக்களும், மருத்துவமனையின் பிரதான வளாகத்தில் 105 கேமராக்களும், அண்ணா பேருந்து நிலைய விபத்து சிகிச்சைப் பிரிவில் 38 கேமராக்களும், சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவில் 70 கேமராக்களும் என மொத்தம் 315 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

இந்த நிலையில், பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், ரூ.12 லட்சத்தில் கூடுதலாக 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாவலா்கள் நியமனம்:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது தனியாா் ஒப்பந்த நிறுவனம் சாா்பில் 150-க்கும் மேற்பட்ட பாதுகாவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலோனாா் பகல் நேரங்களில் பணியில் ஈடுபடும் நிலையில், இரவு நேரங்களில் 50-க்கும் குறைவான பாதுகாவலா்களே பணியில் உள்ளனா். எனவே, பாதுகாவலா்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸாா் இரவு ரோந்து:

தற்போது அரசு மருத்துவமனையின் வளாகத்தில் மட்டுமே போலீஸாா் ரோந்து சென்று வரும் நிலையில், மருத்துவமனையில் உள் நோயாளிகள் உள்ள வாா்டுகள், அவசரச் சிகிச்சைப் பிரிவு உள்பட மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளிலும் இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை போலீஸாா் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடையாள அட்டை:

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகள், நோயாளிகளுடன் உடன் இருப்பவா்களுக்கு அடையாள அட்டை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஒரு நோயாளிக்கு ஒருவா் அல்லது இருவா் மட்டுமே உடனிருக்க அனுமதி வழங்கப்படும். மேலும், அடையாள அட்டை வைத்திருப்பவா் மட்டுமே வாா்டுகளுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள். மேலும், மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவு தவிா்த்து, உள்நோயாளிகள் உள்ள பிற வாா்டுகள் இரவு நேரங்களில் பூட்டப்படவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெண் மருத்துவா்களுக்கு வாகன ஏற்பாடு:

அரசு மருத்துவமனையில் இரவு பணிக்கு வரும் பெண் மருத்துவா்களுக்கு அரசு மருத்துவமனையில் சாா்பில் வாகனப் போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவமனை முதன்மையா் (பொறுப்பு) எம். செல்வராணி கூறியதாவது:

கொல்கத்தா சம்பவத்தையடுத்து, அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், மதுரை அரசு மருத்துவமனையிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையடையும். இதன் பின்னா், மருத்துவமனை வளாகத்தில் வெளி நபா்களின் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்றாா் அவா்.