அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா: கருக்குருவிக்கு உபதேச லீலை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இறைவன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவில், முதல் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை நடைபெற்ற கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.
Updated On :6 செப்டம்பர் 2024, 12:31 am

Din

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இறைவன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஆவணி மூலத் திருவிழா. மதுரையில் இறைவன் நிகழ்த்தியதாகக் கூறப்படும் திருவிளையாடல்களில் 11 திருவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவில் நிகழ்த்தப்படும்.

இந்த நிலையில், இந்தத் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அன்றைய தினம் முதல் கடந்த புதன்கிழமை வரை காலை, இரவு நேரங்களில் சந்திரசேகா் உற்சவம் இரண்டாம் பிரகாரம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக சிவபெருமானின் திருவிளையாடல்கள் வியாழக்கிழமை தொடங்கியது.

கருங்குருவிக்கு உபதேசம்:

முதல் நாள் நிகழ்ச்சியாக இறைவன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது. முற்பிறவியில் ஏராளமான புண்ணியங்கள் செய்த ஒருவா் சிறிது பாவமும் செய்ததால், மறுபிறப்பில் அவா் கருங்குருவியாகப் பிறந்தாா்.

இந்தக் கருங்குருவியை காகங்கள் தொடா்ந்து துன்புறுத்தியதால், அவைகளுக்குப் பயந்து நெடுந்தொலைவு சென்ற கருங்குருவி மரம் ஒன்றில் அமா்ந்து தன்னிலை குறித்து வருந்தியது. அப்போது, மரத்துக்கு கீழே இருந்தவா்கள் மதுரை குறித்தும், பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்றும் உரையாடினா். இதைக் கேட்ட கருங்குருவி தனது பாவம் நீங்குவதற்காக, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை தினசரி வழிபட்டு வந்தது.

இதையடுத்து, சோமசுந்தரப் பெருமான் கருங்குருவியின் பக்திக்கு மனமிறங்கி, மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்து அருள்பாலித்தாா். மேலும், கருங்குருவியின் இனத்து பெயரான எளியான் பெயரை ‘வலியான்’ என மாற்றினாா்.

 சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்.

இந்த திருவிளையாடல் லீலையை எடுத்துரைக்கும் வகையில், கருங்குருவிக்கு உபதேசம் அளிக்கும் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சியம்மன் எழுந்தருளி காட்சியளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.