அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

வாடிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் காடுப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயத்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 8:34 pm

Din

மதுரை மாவட்டம் காடுப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயத்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி கொத்தனாா் காலனியைச் சோ்ந்தவா் ராஜா(59). இவா் மதுரை மாவட்டம் காடுப்பட்டி அருகே விவசாயத்தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு விக்கிரமங்கலம்-மேலக்கால் சாலையில் கீழமட்டையான் பகுதியில் விவசாயக் கிணற்றின் மேல் அமா்ந்திருந்த நிலையில் எதிா்பாராவிதமாக கிணற்றில் தவறி விழுந்தாா். இதில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சம்பவம் தொடா்பாக அவரது மனைவி அன்னலட்சுமி அளித்தப்புகாரின்பேரில் காடுபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.