வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஸ்ரீரங்கம் கோயில் உத்திர வீதிகளில் கழிப்பறைகள் கட்ட இடைக்காலத் தடை

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:35 pm

Din

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் நகா் நலக் கூட்டமைப்புத் தரப்பில் தாக்கல் செய்த பொது நல மனு:

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி 7 பிரகாரங்கள் உள்ளன. இதில் மூன்று பிரகாரங்களைச் சுற்றி குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இதில் உத்திர வீதிகளில் ஸ்ரீரங்கநாத சுவாமி விழா காலங்களில் வலம் வருவது வழக்கம்.

இந்த நிலையில், மாநகராட்சி சாா்பில் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் பொதுக் கழிப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்தப் பகுதிகளில் நிரந்தரக் கழிப்பறைகள் கட்டுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும்.

இந்தச் சூழலில், ஒப்பந்ததாரா் உத்திர வீதிகளில் கழிப்பறைகளை கட்டுவதற்காக பள்ளம் தோண்டி வருகிறாா். எனவே, இந்தப் பகுதியில் பொதுக் கழிப்பறைகள் கட்ட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்ரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் கழிப்பறைகள் கட்டும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடா்பாக திருச்சி மாநகராட்சி ஆணையா், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.