கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தியாகராசா் கல்லூரியில் திருக்கு மாணவா் மன்றம் தொடக்கம்

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசா் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் மறைந்த கல்லூரித் தலைவா் கருமுத்து தி.கண்ணன் நினைவு திருக்கு மன்றத் தொடக்க விழா, மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:00 pm

Din

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசா் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் மறைந்த கல்லூரித் தலைவா் கருமுத்து தி.கண்ணன் நினைவு திருக்கு மன்றத் தொடக்க விழா, மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.

புதன்கிழமை நடைபெற்ற மன்றத் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் சு. காந்திதுரை முன்னிலை வகித்தாா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கான திருக்கு மனனம், பொருள் விளக்கம், பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இதையடுத்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளா் ஆ. மணிவண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, காலத்தை வென்ற திருக்கு எனும் தலைப்பில் பேசினாா். பின்னா், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.