சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு முகாம்

மதுரையில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

News image
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமில் போக்குவரத்து துணை ஆணையா் வனிதா தலைமையில் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டவா்கள். உடன் போக்குவர
Updated On :25 செப்டம்பர் 2024, 9:33 pm

Din

மதுரையில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில், மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையா் எஸ். வனிதா பங்கேற்றுப் பேசியதாவது:

ஆட்டோ ஓட்டுநா்கள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். கூடுதலான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை ஆட்டோ ஓட்டுநா்கள் முறையாக பின்பற்ற வேண்டும். ஆட்டோக்குரிய ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும். சாலைகளில் செல்லும்போது சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது. அதிவேகத்தில் ஆட்டோக்களை இயக்குவது, போட்டியிட்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வில், போக்குவரத்து காவல் உதவி ஆணையா்கள் செல்வின், இளமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள், 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.