பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு 2 ஆண்டுகளாக உதவித் தொகை வழங்கவில்லை
விருதுநகா் மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 4 ஆயிரத்தை, கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கவில்லை என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் புகாா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா் (விருதுநகா்), ராணி ஸ்ரீகுமாா் (தென்காசி), மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா்.








