சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் மதுரை, பெத்தானியாபுரம் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:44 pm

Din

தொழிலாளா் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் மதுரை, பெத்தானியாபுரம் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, சிஐடியு மாவட்டச் செயலா் இரா. லெனின் தலைமை வகித்தாா். எல்பிஎப் பேரவை செயலா் மேலூா் வி. அல்போன்ஸ், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் கே. கண்ணன், ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலா் பி. ஜீவன் மூா்த்தி, ஏஐடியுசி மாவட்டச் செயலா் கே. சேது, எம்எல்எப் மாநில இணைப் பொதுச் செயலா் எஸ். மகபூப் ஜான் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

அப்போது, மத்திய அரசு தொழிலாளா்களின் தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் வகையில் அமல்படுத்திய 4 தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களுக்கு, அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சங்கத்தில் சேரும் உரிமையை மறுக்கக் கூடாது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், எச்எம்எஸ் பொதுச் செயலா் வி. பாதரஸ் வெள்ளை, சிஐடியூ மாவட்டத் தலைவா் ஆா். தெய்வராஜ், எல்பிஎப் மாவட்டச் செயலா் சி. கருணாநிதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.