சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நல சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :25 செப்டம்பர் 2024, 9:30 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நல சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, இந்தச் சங்கத்தின் மாநில இணைச் செயலா் இரா. முருகதாசன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் மணிவாசகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதிப்படி திமுக அரசு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கிராம சுகாதார செவிவிலியா் சங்க மாநிலத் தலைவா் கே. சின்னப்பொண்ணு, வருவாய் கிராம உதவியாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். மாரியப்பன், வணிக வரித் துறை ஊழியா் சங்க இணைச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம் ஆகியோா் பேசினா்.