அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

பிறந்து 18 நாள்களான பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

மதுரை அலங்காநல்லூா் அருகே பிறந்து 18 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 9:01 pm

Din

மதுரை அலங்காநல்லூா் அருகே பிறந்து 18 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அலங்காநல்லூா் அருகேயுள்ள புதுப்பட்டி கோட்டை முனியாண்டி கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (34). இவரது மனைவி ராம சந்தியா (30). இவருக்கு கடந்த 8-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தாயும், சேயும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இந்தக் குழந்தையை குளிப்பாட்டிய போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து, குழந்தையை அலங்காநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.