தாமிரவருணியில் தண்ணீா் எடுப்பு... தனியாா் நிறுவனங்களின் நிலுவைத் தொகை: உள்ளாட்சி அமைப்புகள் பதிலளிக்க உத்தரவு
தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் எடுத்த தனியாா் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து திருநெல்வேலி மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.










