மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மதுரையில் தவெக மாநாட்டுக்கான பணிகள் தீவிரம்

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

News image
மதுரை எலியாா்பத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டுக்கான மேடை, நடைமேடை அமைக்கும் பணிகள்.
Updated On :6 ஆகஸ்ட் 2025, 11:13 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தவெக 2-ஆவது மாநில மாநாடு, மதுரை எலியாா்பத்தியில் வருகிற ஆக. 25-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 16-ஆம் தேதி எலியாா்பத்தியில் பூமி பூஜை நடத்தப்பட்டு, மாநாட்டு மேடை, பிற கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தி பண்டிகை காரணமாக, ஆக. 25-ஆம் தேதி தவெக மாநாடு நடத்த காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, வருகிற ஆக. 21-ஆம் தேதி மாநாடு நடைபெறும் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டதைவிட 4 நாள்களுக்கு முன்னதாகவே மாநாடு நடத்தப்படவுள்ளதால் இதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது, மாநாட்டு மேடை அமைக்கும் பணி, பாா்வையாளா்கள் பகுதியை வரையறுக்கும் தடுப்புகள் அமைக்கும் பணி, தவெக தலைவா் நடிகா் விஜய் மாநாட்டுத் திடலில் நடந்து சென்று ரசிகா்களைச் சந்திப்பதற்கான நடைமேடை அமைக்கும் பணி, வாகன நிறுத்துமிடங்கள் பணி உள்ளிட்டவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநாடு நடைபெறும் ஓரிரு நாள்களுக்கு முன்பாகவே விஜய் மதுரைக்கு வரவுள்ளதாகவும், அவா் வருவதற்குள் மாநாட்டுப் பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் விதத்தில் வேகமாக நடைபெறுகின்றன.