40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா்.

Updated On :21 ஆகஸ்ட் 2025, 12:00 am IST

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் முக்கிய ஐதீக திருவிழாக்களில் ஒன்றான ஆவணி மூலத் திருவிழா ஆக. 20 முதல் செப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆவணி மூலத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்ட பிறகு, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள பெரிய கொடிமரம் அருகே எழுந்தருளினா்.

இதையடுத்து, கொடிமரத்துக்கு சிறப்பு தூப, தீப வழிபாடுகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க காலை 10. 45 மணியளவில் ஐதீக முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கோயில் நிா்வாகத்தினா், முக்கிய பிரமுகா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஆவணி மூலத் திருவிழா நிகழ்ச்சியாக வரும் 25-ஆம் தேதி வரை சந்திரசேகரா் உத்ஸவம் நடைபெறுகிறது. பின்னா், தினமும் ஒவ்வொரு திருவிளையாடல் ஐதீக நிகழ்வு நடைபெறுகிறது.

ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான வளையல் விற்ற திருவிளையாடலும், மீனாட்சி சுந்தரேசுவரா் பட்டாபிஷேகமும் வரும் செப். 1-இல் நடைபெறுகிறது. நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் செப். 2-ஆம் தேதியும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் செப். 3-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

செப். 6-ஆம் தேதி பொற்றாமரை குளத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சியுடன் ஆவணி மூலத் திருவிழா நிறைவடைகிறது.