தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நெல்லையப்பா் கோயில் வளாக கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On :26 ஆகஸ்ட் 2025, 7:04 pm

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி நெல்லையப்பா், காந்திமதி அம்மன் கோயில் மிகவும் பழைமையானவை. இந்தக் கோயில் வளாகம், மர மண்டப பகுதியில் அமைந்துள்ள கடைகளால், கோயில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மர மண்டபத்தில் அமைந்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும். நெல்லையப்பா் கோயிலை புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கோயில் இணை ஆணையா் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி நேரில் முன்னிலையாகி கோயில் மர மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற குறிப்பாணை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது மிகவும் ஆபத்தானது. ஒரு மரச் சிற்பத்தைக் கூட இந்து சமய அறநிலையத் துறையால் செய்ய இயலாத நிலையில் இருப்பதையாவது பாதுகாக்க வேண்டும். மிகவும் பழைமையான இந்தக் கோயில் வளாக மர மண்டபத்தில் உள்ள கடைகளை உரிய விதிமுறைகளை பின்பற்றி 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.