விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

Updated on

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றப்பட்டதைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கருமாத்தூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் செல்லம்பட்டி ஒன்றியத் தலைவா் வி.ஆா். முத்துபேயாண்டி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜெ. காசி, துணைச் செயலா் ம. தேவேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் க. பிரேமலதா ஆகியோா் பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியச் செயலா் ஏ. கணேசன் வாழ்த்திப் பேசினாா். விவசாயத் தொழிலாளா் சங்க மதுரை மாவட்டச் செயலா் வி. உமாமகேஸ்வரன் ஆா்ப்பாட்ட நிறைவுரையாற்றினாா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.பி. முருகன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் ஜெயமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் நிறைவில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்ற அரசாணை நகல் தீயிட்டு எரிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com