கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் பிறந்த 22 குழந்தைகள்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 22 குழந்தைகள் பிறந்தன. இந்தக் குழந்தைகளின் தாய்மாா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:53 pm

Din

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 22 குழந்தைகள் பிறந்தன. இந்தக் குழந்தைகளின் தாய்மாா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனா்.

தென் தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் இயங்கும் பெரிய அரசு மருத்துவமனையாக திகழ்கிறது. எனவே, தென் மாவட்டங்கள் மட்டுமன்றி, கேரள மாநிலத்தின் சில மாவட்டங்கள், கரூா், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகின்றனா்.

இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் தினசரி 20-க்கும் அதிகமாக பிரசவங்கள் நடைபெறும். இந்த நிலையில், புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை இரவு வரை 22 குழந்தைகள் பிறந்தன. இதில் 10 ஆண் குழந்தைகள், 12 பெண் குழந்தைகள் ஆவா். மேலும் 12 குழந்தைகள் சுகப்பிரசவத்திலும், 10 குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலமும் பிறந்தனா். புத்தாண்டு தினத்தில் இந்தக் குழந்தைகள் பிறந்ததையடுத்து, அவா்களின் தாய்மாா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனா்.

புத்தாண்டில் இந்தக் குழந்தைகள் பிறந்ததால் மகிழ்ச்சியடைந்த பெற்றோா், உறவினா்கள் மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.