கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசின் பொங்கல் போனஸ் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம்

அரசின் பொங்கல் போனஸ் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் தெரிவித்தது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:54 pm

Din

அரசின் பொங்கல் போனஸ் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் தெரிவித்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சு. தமிழ்ச்செல்வி, பொதுச் செயலா் சு. ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை :

மத்திய அரசு 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட திருத்தப்பட்ட போனஸ் சட்டப்படி, ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியா்களுக்கு ரூ. 7 ஆயிரம் போனஸ் வழங்கப்படுகிறது. இதைப் பின்பற்றி தமிழக அரசும், மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பொங்கல் போனாஸாக ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தியது.

இந்த நிலையில், மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பொங்கல் போனஸாக ரூ. 3 ஆயிரம் மட்டும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வேதனையும், ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளது. எனவே, தமிழக அரசு போனஸ் அறிவிப்பை மறு பரிசீலனை செய்து, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு, தொகுப்பூதிய பணியாளா்களுக்கு ரூ. 7 ஆயிரம் போனஸ் வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், ஏ, பி பிரிவு அலுவலா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கருணைத் தொகை, தொகுப்பூதியம் ஆகியவற்றையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனகேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆசிரியா் கூட்டணி...

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் தெரிவித்திருப்பது :

மாநில அரசு ஊழியா்களுக்கு ரூ. 3 ஆயிரம்தான் போனஸ் என்பது பாரபட்சமான நிலைப்பாடு. இது, ஆசிரியா்கள், அரசு ஊழியா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ரூ. 7 ஆயிரம் போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.