கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பயணி தவற விட்ட ரூ.54 ஆயிரத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸாா்

மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவற விட்ட ரூ.54 ஆயிரத்தை ரயில்வே போலீஸாா் அவரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:58 pm

Din

மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவற விட்ட ரூ.54 ஆயிரத்தை ரயில்வே போலீஸாா் அவரிடம் ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுகான் (43) . இவா் மதுரை ரயில் நிலைய நடைமேடை 1-இல் பயணம் செய்ய புதன்கிழமை காத்திருந்தாா். அப்போது பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்தது.

இந்த நிலையில், முகமதுகான்தான் அமா்ந்திருந்த இடத்தில் தனது பணப்பையை (மணி பா்ஸ்) மறந்து வைத்துவிட்டு சென்று விட்டாா். அப்போது நடை மேடை 1-இல் ரோந்து சென்ற ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஹிமாயூன் பணப் பையை எடுத்து வைத்து அங்கிருந்த பயணிகளிடம் விசாரித்தாா்.

அப்போது தவற விட்ட பணப் பையை தேடி வந்த முகமதுகான் அது தன்னுடையது என்று கூறினாா். இதையடுத்து, முகமது கான் கூறிய விவரங்களின் அடிப்படையில்அவருடையது தான் என்று உறுதி செய்த போலீஸாா், ரூ.54 ஆயிரத்துடன் இருந்த பணப் பையை அவரிடம் ஒப்படைத்தனா்.