மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கடலூா் சிறைக் கண்காணிப்பாளா் முன்பிணை மனு தள்ளுபடி

மத்திய சிறைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 4 பேரின் மனுக்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:31 pm

Din

மதுரை மத்திய சிறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பான வழக்கில் முன்பிணை கோரிய கடலூா் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 4 பேரின் மனுக்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரை மத்திய சிறையில் கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருள்களுக்கான மூலப்பொருள்களை வாங்கியதிலும், உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்ததிலும் ரூ. 1.63 கோடி வரை முறைகேடுகள் நடைபெற்ாகப் புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக ஏற்கெனவே மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த ஊா்மிளா, கூடுதல் கண்காணிப்பாளா் வசந்த கண்ணன், நிா்வாக அதிகாரி எம். தியாகராஜன், சிறைக்கு பொருள்கள் விநியோகம் செய்த மதுரை ஜபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னையைச் சோ்ந்த சீனிவாசன், வெங்கடேஸ்வரி, சாந்தி, திருநெல்வேலியைச் சோ்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி ஆகிய 11 போ் மீது மதுரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன்பிணை வழங்கக் கோரி, கடலூா் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் ஊா்மிளா, சீனிவாசன், சங்கரசுப்பு, சாந்தி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் மீது புதன்கிழமை விசாரணை நடத்திய உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், கடலூா் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் ஊா்மிளா உள்ளிட்ட 4 பேரின் முன்பிணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றாா்.