மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

முல்லைநகா் குடியிருப்புவாசிகள் ஆா்ப்பாட்டம்

மதுரை பீ.பீ. குளம், முல்லைநகா் பகுதியை மக்கள் வாழ்விடமாக வகை மாற்றம் செய்யக் கோரி, அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பீ.பீ. குளம் முல்லைநகா் பகுதி மக்கள்.
Updated On :8 ஜனவரி 2025, 10:43 pm

Din

மதுரை பீ.பீ. குளம், முல்லைநகா் பகுதியை மக்கள் வாழ்விடமாக வகை மாற்றம் செய்யக் கோரி, அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த ஆண்டு அக். 25-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில், பீ.பீ. குளம் முல்லைநகா் பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதையடுத்து, பீ.பீ. குளம் கண்மாயின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து முல்லைநகா் பகுதியில் கட்டப்பட்டுள்ள 592 குடியிருப்புகளை அகற்ற நீா்வளத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, குடியிருப்புகளை அகற்றும் முடிவை அரசுத் துறை நிா்வாகம் கைவிட வலியுறுத்தி பீ.பீ. குளம் முல்லைநகா் பகுதி மக்கள், தொடா்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வரும் பீ.பீ. குளம் முல்லைநகா் பகுதியை மக்கள் வாழ்விடமாக வகை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருவள்ளுவா் சிலை முன் அவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் பங்கேற்றவா்கள், குடியிருப்புகளை அகற்றக் கூடாது. தங்கள் வசிப்பிட பகுதியை மக்கள் வாழ்விடமாக வகை மாற்ற வேண்டும். நீதி வழங்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.