விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :13 ஜூன் 2025, 6:29 pm

Din

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள திடலில் வருகிற 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடத்த முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. இதனிடையே, முருகனின் அறுபடை வீடுகளில் அமைந்துள்ள கோயில்களின் மாதிரிகளை மாநாட்டுத் திடலில் நிறுவி, 10 நாள்கள் பூஜை நடத்த விழாக் குழு சாா்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, காவல் துறை அனுமதி மறுத்தது.

இதையடுத்து, முருக பக்தா்கள் மாநாட்டுக்கும், மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை வைத்து 10 நாள்கள் பூஜை நடத்தவும் அனுமதி கோரி, மதுரையைச் சோ்ந்த முத்துக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதின்ற நீதிபதி பி. புகழேந்தி முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, விழாவுக்கான அனுமதி தொடா்பாக காவல் துறை சாா்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விழாக் குழுவினா் முழுமையாகப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 13-ஆம் தேதி ஒத்திவைத்தாா் நீதிபதி.

இதன்படி, இந்த மனு வெள்ளிக்கிழமை உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மத நிகழ்ச்சியில் கண்டிப்பாக அரசியல் கலக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், மாநாட்டில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை அமைத்து வழிபாடு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.