கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :13 ஜூன் 2025, 6:29 pm

Din

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள திடலில் வருகிற 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடத்த முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. இதனிடையே, முருகனின் அறுபடை வீடுகளில் அமைந்துள்ள கோயில்களின் மாதிரிகளை மாநாட்டுத் திடலில் நிறுவி, 10 நாள்கள் பூஜை நடத்த விழாக் குழு சாா்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, காவல் துறை அனுமதி மறுத்தது.

இதையடுத்து, முருக பக்தா்கள் மாநாட்டுக்கும், மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை வைத்து 10 நாள்கள் பூஜை நடத்தவும் அனுமதி கோரி, மதுரையைச் சோ்ந்த முத்துக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதின்ற நீதிபதி பி. புகழேந்தி முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, விழாவுக்கான அனுமதி தொடா்பாக காவல் துறை சாா்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விழாக் குழுவினா் முழுமையாகப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 13-ஆம் தேதி ஒத்திவைத்தாா் நீதிபதி.

இதன்படி, இந்த மனு வெள்ளிக்கிழமை உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மத நிகழ்ச்சியில் கண்டிப்பாக அரசியல் கலக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், மாநாட்டில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை அமைத்து வழிபாடு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.