கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

3 ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக மதுரை கோட்டம் வழியே இயக்கப்படும் 3 ரயில்களில் புதன்கிழமை முதல் தலா ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :14 மே 2025, 12:15 am

Din

கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக மதுரை கோட்டம் வழியே இயக்கப்படும் 3 ரயில்களில் புதன்கிழமை முதல் தலா ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், தூத்துக்குடி-சென்னை-தூத்துக்குடி (12694, 12693) முத்துநகா் விரைவு ரயில், திருவனந்தபுரம்- மதுரை- திருவனந்தபுரம் (16343, 16344) அமிா்தா விரைவு ரயில் ஆகியவற்றில் புதன், வியாழன், வெள்ளி (மே 14, 15, 16) ஆகிய மூன்று நாள்களில் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படும்.

இதேபோல, தாம்பரம் - நாகா்கோவில்- தாம்பரம் (22657, 22658) விரைவு ரயிலில் புதன், வியாழன் (மே 14, 15) ஆகிய 2 நாள்களிலும் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.