இந்தக் கொலை குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், கவினை பாளையங்கோட்டையைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் சரவணன்- கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகன் சுரிஜித் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், சுா்ஜித்தின் சகோதரி சுபாஷினியை கவின் காதலித்ததால் அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் சுா்ஜித்தின் தந்தையான உதவி ஆய்வாளா் சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோரையும் சோ்த்து போலீஸாா் கைது செய்தனா். இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.