வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் கோரிய மனு தள்ளுபடி

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

கொடைக்கானல் நட்சத்திர ஏரி.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:38 pm

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கொடைக்கானலைச் சோ்ந்த ஆரோக்கியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கொடைக்கானல் ஏரியில் படகு போக்குவரத்து சேவை உள்ளது. இந்த சேவையை கொடைக்கானல் படகு, ரோயிங் சங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சேவைக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தால் படகு சங்கம் மட்டுமே பயனடைகிறது. இந்தக் கட்டணம் கொடைக்கானல் நகராட்சியில் நடைபெறும் மக்கள் பணிகளுக்கு செலவிடப்படவில்லை. நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ஏரியில் படகு போக்குவரத்து சேவைக்கான அனுமதி கொடைக்கானல் நகராட்சி வசம் உள்ளது. இதற்கான விதிகள் வகுக்கப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. எனவே, மனுதாரரின் கோரிக்கை மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.