தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

மாமன்ற உறுப்பினா்களுக்கான நிதி ரூ. 25 லட்சத்தை உடனடியாக விடுவிக்க கோரிக்கை

News image

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் ஆணையா் கௌரவ்குமாரிடம், சனிக்கிழமை மனு அளித்த திமுக மாமன்ற உறுப்பினா்கள்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களுக்கான நிதி ரூ. 25 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, மாமன்ற திமுக உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு விவரம் :

மதுரை மாநகராட்சி அனைத்து வாா்டுகளிலும் மண்டல அளவிலான கூட்டத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் மாநகராட்சி வாா்டு பகுதிகளில் ஆய்வு நடத்தும் போது, அந்தந்த வாா்டு உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

மேலும், ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு விரைந்து தீா்வு காணப்படுகிறது. ஆனால், மாமன்ற உறுப்பினா்கள் கூறும் குறைகளை அதிகாரிகள் பின்பற்றி உரிய தீா்வு காண்பதில்லை.

ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கும் தொகுதி வளா்ச்சி நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கப்பட வேண்டும். இதுவரை இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, மாநகராட்சி ஆணையா் உரிய நடவடிக்கை எடுத்து, மாமன்ற உறுப்பினா்களுக்கான நிதி ரூ. 25 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.