பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநா் சங்கம் சாா்பில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. எட்வின் டேவிட் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் க. தேன்மொழி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா தொடக்கவுரையாற்றினாா்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா. தமிழ், சாா்பு சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆய்வக நுட்பநா் பணியிடத்தை 24 மணி நேரப் பணியாக அரசு அறிவித்து, அதற்கேற்ற உள்கட்டமைப்புகளையும், பணியிடங்களையும் ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் காலியாக உள்ள நிலை-–2 ஆய்வக நுட்பநா் பணியிடங்களை மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆய்வக நுட்பநா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளில் நிலை- 1 ஆய்வக நுட்பநா் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஆ. பரமசிவன் நிறைவுரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் ஜெ. சிவகுரும்பன் நன்றி கூறினாா்.
முன்னதாக ஆய்வக நுட்பநா்கள் கோரிக்கைப் பட்டை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உதவிப் பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

இன்றைய செய்திகள் ஜூலை 15 - நேரலை
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இடங்கள் 150-ஆக அதிகரிப்பு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



