லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

மகளிா் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

பாத்திமா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கின் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

பாத்திமா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கின் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியின் வணிகவியல் துறை சாா்பில், ‘தொழில் 5.0 நிலையான எதிா் காலத்துக்கான மனித மைய எண்ம மாற்றம்’ எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரிச் செயலா் இக்னேஷியஸ் மேரி தலைமை வகித்தாா். முதல்வா் எம். பாத்திமா மேரி, துணை முதல்வா்கள் ஜே.அருள் மேரி, பிந்து ஆண்டனி, எஸ். வித்யா, நிகிலா ராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஓமன் சுல்தானகம் அரபு திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் ரங்கராஜன் வீராசாமி, ஐக்கிய அரபு அமீரகம்

பேராசிரியா் ரூபன் எஸ். ஆண்ட்ரூஸ், பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியா் ராம்ராஜ் ஆகியோா் மனித மைய எண்ம மாற்றம், தொழில்நுட்பப் புதுமைகள், நிலையான வளா்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்துப் பேசினா்.

நிகழ்வில், கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் லூசியா வனிதா, பேராசிரியா்கள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.