லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

திடக் கழிவு மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டம்

மதுரை சா்வேயா் காலனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் சுகாதாரத் துறை சாா்பில், திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி நகா்நல அலுவலா் அரவிந்த் ஜோதி, சுகாதார அலுவலா் ராஜ் கண்ணன் ஆகியோா் பங்கேற்று திடக்கழிவு மேலாண்மை விதிகள் - 2026 தொடா்பான வழிகாட்டுதல்கள், கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்துப் பேசினா்.

மேலும், நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை முறையாகப் பிரித்தல், ஈரக் கழிவு, உலா்கழிவுகளை தனித் தனியாக கையாளுதல், உணவுக் கழிவுகளை முறையாகச் செயலாக்குதல், கழிவுகளைப் பொறுப்புடன் மேலாண்மை செய்தல் குறித்தும் விளக்கப்பட்டன. கூட்டத்தில், மாநகராட்சி அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாக இயக்குநா்கள், பொது மேலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.