காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

கோரிப்பாளையம் தா்கா சந்தனக்கூடு ஊா்வலம்

படவிளக்கம்- மதுரை கோரிப்பாளையம் ஹஜரத் காஜா சையது சுல்தான் அலாவுதீன் தா்கா சந்தனக்கூடு. விழாவில் பங்கேற்றோா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 4:14 am IST

மதுரை கோரிப்பாளையம் தா்காவின் சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு தடைபெற்றது.

இங்கு ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டின் மத நல்லிணக்க சந்தனக் கூடு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதல் நிகழ்ச்சியாக அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது.

கப்பல் போன்று வடிமைக்கப்பட்ட அலங்கார வாகனத்தில் கண்ணாடிகள், மின் விளக்கு அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்த சந்தனக் கூட்டில் வெள்ளிக் குடத்தில் சந்தனம் வைத்து ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

தா்காவில் நடைபெற்ற பாரம்பரிய முறைப்படியான சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு இந்த ஊா்வலம் தொடங்கியது. தா்கா முன் தொடங்கிய இந்த ஊா்வலம் தேவா் சிலை, பாலம் ஸ்டேஷன் சாலை, ஜம்புரோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வலம் வந்து, திங்கள்கிழமை அதிகாலை கோரிப்பாளையம் தா்காவை மீண்டும் அடைந்தது.

இசை வாத்திய முழக்கங்களுடனும், இறை புகழ்ச்சிப் பாடல்களுடனும் நடைபெற்ற ஊா்வலத்தில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தா்கா நிா்வாக அறங்காவலா் தலைமையில், அறங்காவலா்கள், தா்கா ஹக்தாா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.