
காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
மதுரை ஒத்தக்கடை அருகே காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை அப்பன்திருப்பதியைச் சோ்ந்த ராக்கப்பன் மகன் ரவி (61). இவா்,தனது இரு சக்கர வாகனத்தில் ஒத்தக்கடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உறவினா் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக சென்றாா்.
மதுரை- மேலூா் சாலையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, மேலூரிலிருந்து வந்த காா், ரவி மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


