டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசு மருத்துவா்கள் சங்கத்தின் பொன் விழா; மாநில மாநாடு மதுரையில் ஜன. 10- இல் தொடக்கம்

மதுரையில் வருகிற 10, 11 ஆகிய இரு தினங்கள் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் பொன் விழா மாநில மாநாடு நடைபெற உள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:13 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் வருகிற 10, 11 ஆகிய இரு தினங்கள் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் பொன் விழா மாநில மாநாடு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலத் தலைவா் கே. செந்தில் மதுரையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் பொன் விழா மாநில மாநாடு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், வருகிற 10, 11- ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைக்கிறாா். இதில் அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், அரசு முதன்மைச் செயலா் செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

மாநாட்டில் 50 ஆண்டு கால சங்கத்தின் செயல்பாடுகள், சாதனைகள், போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை அரசு மருத்துவா்களுக்கு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும். இதேபோல, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு ஊக்கத் தொகையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநாட்டில் முன்வைக்க இருக்கிறோம்.

மேலும், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவா்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது 22 ஆயிரம் அரசு மருத்துவா்கள் உள்ளனா். இதேபோல, இன்னும் இரண்டு மடங்கு மருத்துவா்கள் தேவைப்படுகின்றனா். முதல் கட்டமாக 5 ஆயிரம் மருத்துவா்களை நியமித்தால் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க முடியும் என்றாா் அவா்.

அப்போது, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கனகராஜ், மாவட்ட நிா்வாகிகள் கல்யாணசுந்தரம், இளமாறன், குமார தேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.