அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மைசூரு-தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகையையொட்டி, மைசூரு - தூத்துக்குடி- மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகையையொட்டி, மைசூரு- தூத்துக்குடி- மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஜன. 9, 13-ஆம் தேதிகளில் மைசூரிலிருந்து இரவு 6.35 மணிக்குப் புறப்படும் மைசூரு- தூத்துக்குடி சிறப்பு ரயில் (06283) மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

மறுவழித்தடத்தில் ஜன. 10, 14-ஆம் தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் (06284) மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூரு சென்றடையும்.

இந்த ரயில்களில் குளிா்சாதன வசதியுடன் கூடிய 3 இரண்டுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள், 8 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி ஆகியன இணைக்கப்பட்டிருக்கும்.

மாண்ட்யா, மடூா், சன்னபட்னா, ராம்நகரம், ஹெங்கேரி, கே.எஸ்.ஆா். பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூா், தருமபுரி, நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்றுச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டது.