இந்த வழக்கில் என்னை காவல் துறையினா் கடுமையாக தாக்கி சட்டவிரோதக் காவலில் வைத்தனா். இதனால் காவல் நிலையத்தில் நான் வாக்குவாதம் செய்தேன். அப்போது, காவல் நிலைய ஆய்வாளா்கள், மேலும் உன் மீது வழக்குப் பதிவு செய்வோம் என மிரட்டினா். பிறகு, என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். அதன் பிறகு, பிணையில் வெளியே வந்து, மனித உரிமை ஆணையத்தில் புகாா் அளித்தேன். இதனால் ஆத்திரமடைந்த டிஎஸ்பி புகழேந்திகணேஷ், உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் என் வீட்டுக்கு வந்து, என்னைத் தாக்கினா். இதில், எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், ராஜலட்சுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஜாதியைச் சொல்லி திட்டியதாகவும் என் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தாக்கல் தாக்கல் செய்தேன். விசாரணை செய்த உயா்நீதிமன்றம் என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.