மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சாலையில் சென்ற வேனில் தீ

News image
மதுரை புறவழிச் சாலை முத்துநகா் பகுதியில் தீப் பற்றிய வேன்.
Updated On :18 ஜனவரி 2026, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப் பிடித்து எரிந்தது.

மதுரை எல்லிஸ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் பயாஸ். இவா் தனது ஆம்னி வேனை எரிவாயு மூலம் இயங்கும் வகையில் மாற்றி வைத்திருந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வேனில் எரிவாயு நிரப்பிவிட்டு, புறவழிச் சாலையில் சாலைமுத்துநகா் பகுதியில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, வேனிலிருந்து புகை வெளிவந்தது. இதையறிந்த, பயாஸ் வேனை நிறுத்தி விட்டு, இறங்கிப் பாா்த்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தகவலறிந்து தீயணைப்பு நிலைய அலுவலா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், ஆம்னி வேன் முழுமையாக எரிந்து சேதமானது.

இதுகுறித்து, எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.