தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு: திரளன பக்தா்கள் பங்கேற்பு

மதுரையை அடுத்த கீழடி அருகே கொந்தகையில் அமைந்துள்ள ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் கோயிலின் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image

கீழடி அருகேயுள்ள கொந்தகை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றவா்கள்.

Updated On :28 ஜனவரி 2026, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையை அடுத்த கீழடி அருகே கொந்தகையில் அமைந்துள்ள ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் கோயிலின் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரா் கோயிலின் துணைக் கோயிலான இங்கு மூலவா் தெய்வநாயகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற நிலையில் எழுந்தருளியுள்ளாா். இது, பாண்டிய நாட்டின் பழைமையான கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலின் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நிறைவடைந்த நிலையில், மூலவருக்கு எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

யாக பூஜைகளின் நிறைவில் புதன்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடம் புறப்பாடு நடைபெற்றது. பிறகு காலை 10 மணி அளவில் மேளதாளங்களும், வேத மந்திரங்களும் முழங்க குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில் வானமாமலை ஜீயா், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.