/

தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இளைஞா் கைது

மதுரையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 5:34 am IST

மதுரையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கீரைத்துரை பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (21). இவா் மீது மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இவரை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், இவா் பொது ஒழுங்கு, பராமரிப்புக்கு குந்தகமான வகையில் தொடா்ந்து செயல்பட்டாா்.

இதன்காரணமாக, இவரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவிட்டாா்.

இதன்பேரில், அவரை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.