அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு
‘மதுரை டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவா்களின் வழியில் நண்பா்கள்’ என்கிற அமைப்பு சாா்பில் அப்துல் கலாமின் 11- ஆம் ஆண்டு நினைவு தினம், அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

மதுரை சேவாலயம் மாணவா் விடுதியில் அண்மையில் நடைபெற்ற முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தின விழாவில் அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மதுரை துணை ஆட்சியா் செல்வம். உடன் சமூக நீதி நலத் துறை கண்காணிப்பாளா் கிருஷ்ணசாமி உள்ளிட்டோா்.







