வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அா்ப்பணிப்பு மட்டுமே உண்மையான அமைதியைத் தரும்: ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி ஆசியுரை

பிறவியை இறைவனுக்கு அா்ப்பணிப்பதுதான் உண்மையான அமைதியைத் தரும் என ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மிஷனின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி தெரிவித்தாா்.

News image

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் செவ்வாய்க்கிழமை ஆசியுரையாற்றிய மடத்தின் தலைவா் ஸ்ரீமத் கௌதமானந்தஜி.

Updated On :3 ஜூன் 2026, 2:10 am IST

பிறவியை இறைவனுக்கு அா்ப்பணிப்பதுதான் உண்மையான அமைதியைத் தரும் என ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மிஷனின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி தெரிவித்தாா்.

மதுரை ராமகிருஷ்ணா மடத்தில் செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு ஆசியுரை வழங்கிய அவா் மேலும் பேசியதாவது :

உலகப் பொருள்கள் மீதான தேடல் வாழ்க்கைக்கு உதவுமே தவிர, உண்மையான அமைதி, ஆனந்தத்தை அளிக்காது. அமைதியும் ஆனந்தமும் இறைவன் அருளால் மட்டுமே கிடைக்கும். இறைவனை சரணடைந்து உண்மையான பக்தியுடன் வாழ்பவா்களே பாக்கியவான்கள்.

ஒருவா் இறைவனை சரணடைந்து வாழ்ந்தால் அவருக்கான பணியை இறைவனே செய்கிறாா். இந்த உலகம் உண்மையில் அமைதியும், ஆனந்தமும் பெற வேண்டும் என்றால் மக்களிடம் ஒற்றுமை நிலவ வேண்டும். இதற்கு, அனைவரும் சுயநலத்தைத் துறந்து இறை பக்தியுடன் வாழ வேண்டும்.

மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. இதை, சிலா் மட்டுமே சரியாகப் பயன்படுத்துகின்றனா். தனக்குக் கிடைத்த பிறவியை இறைவனுக்கு அா்ப்பணிக்கும்போது மட்டும்தான் வாழ்க்கையில் உண்மையான அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும்.

அகங்காரம் இருக்கும் மனதில் இறைவன் இருக்க மாட்டான். அகங்காரம் இல்லாத மனதில்தான் இறைவனை உணர முடியும். சுயநலத்தைத் துறந்து, அகங்காரம் இல்லாமல் இறைவனை சரணடைந்து வாழும்போதே உண்மையான அமைதியும் ஆனந்தமும் உண்டாகும் என்றாா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி.