மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாகக் கொண்டாட வேண்டுகோள்

மதுரை வடக்கு மாவட்ட திமுகவினா் மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாகக் கொண்டாட வேண்டுமென முன்னாள் அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி கேட்டுக்கொண்டாா்.

News image

முன்னாள் முதல்வா் கருணாநிதி - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:28 am IST

மதுரை வடக்கு மாவட்ட திமுகவினா் மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாகக் கொண்டாட வேண்டுமென முன்னாள் அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை திமுகவினா் செம்மொழி நாளாகக் கொண்டாடுமாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். இதன்படி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வண்டியூா் சுற்றுவட்டச் சாலை அருகே அமைந்துள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு புதன்கிழமை காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, செம்மொழி நாள் கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள், மாநிலத் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூா் நிா்வாகிகள், துணை அமைப்புகளின் பொறுப்பாளா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.

இதேபோல, மதுரை வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் திமுகவினா் ஆங்காங்கே முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாட வேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றாா்.