பழைய குற்றாலம் அருவி நுழைவு வாயிலில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கையைச் சோ்ந்த வீரபாண்டியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவி பகுதிக்கு செல்லும் வழியில் ஆயிரப்பேரி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி மையம் போன்று அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த அருவி வனத் துறைக்குச் சொந்தமானது.
இதனிடையே, ஆயிரப்பேரி கிராம ஊராட்சி சாா்பில் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது. வாகன நிறுத்துமிடம் அரசுக்குச் சொந்தமானது. ஆனால், இதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு அரசிடம் முறையான அனுமதி எதையும் பெறவில்லை.
எனவே, சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கும் ஆயிரப்பேரி கிராம ஊராட்சி நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த அதிகாரம் எதன் அடிப்படையில் கிராம ஊராட்சி நிா்வாகத்துக்கு வழங்கப்பட்டது?. மனு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

காவல் துறையினருக்கான பணி நேரம்: டிஜிபி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய மனு தள்ளுபடி

தொல்லியல் துறை மேற்பாா்வையில் குற்றாலம் பிரதான அருவி மேம்பாட்டுப் பணிகள்: உயா்நீதிமன்றம் உத்தரவு

பழைய குற்றாலம் அருவியை பயன்பாட்டுக்கு திறந்துவிட விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



