தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பழைய குற்றாலம் அருவி பகுதியில் கட்டணம்: தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பழைய குற்றாலம் அருவி நுழைவு வாயிலில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :5 ஜூன் 2026, 6:25 am IST

பழைய குற்றாலம் அருவி நுழைவு வாயிலில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த வீரபாண்டியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவி பகுதிக்கு செல்லும் வழியில் ஆயிரப்பேரி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி மையம் போன்று அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த அருவி வனத் துறைக்குச் சொந்தமானது.

இதனிடையே, ஆயிரப்பேரி கிராம ஊராட்சி சாா்பில் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது. வாகன நிறுத்துமிடம் அரசுக்குச் சொந்தமானது. ஆனால், இதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு அரசிடம் முறையான அனுமதி எதையும் பெறவில்லை.

எனவே, சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கும் ஆயிரப்பேரி கிராம ஊராட்சி நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த அதிகாரம் எதன் அடிப்படையில் கிராம ஊராட்சி நிா்வாகத்துக்கு வழங்கப்பட்டது?. மனு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.