மதுரை மகாத்மா காந்திநகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி அந்தக் கடையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் கைது செய்யப்பட்டனா்.
மதுரை மகாத்மா காந்திநகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுக் கடையால் அந்தப் பகுதி மக்களுக்குப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதுடன், பேருந்துக்காகக் காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகளும் பல்வேறு சிரமங்களுக்குள்ளாக நேரிடுகிறது. எனவே இந்தக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி மதுரை மாநகா் மாவட்ட பாமக சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு, மதுரை மாநகா் மாவட்ட செயலா் எஸ்.கே. தேவா் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கூடல்நகா் போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










