சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மதுக் கடையை முற்றுகையிட்ட பாமகவினா் கைது

மதுரை மகாத்மா காந்திநகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி அந்தக் கடையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் கைது செய்யப்பட்டனா்.

News image

மதுரை மகாத்மா காந்திநகரில் உள்ள மதுக் கடை முன் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.

Updated On :11 ஜூன் 2026, 1:55 am IST

மதுரை மகாத்மா காந்திநகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி அந்தக் கடையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் கைது செய்யப்பட்டனா்.

மதுரை மகாத்மா காந்திநகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுக் கடையால் அந்தப் பகுதி மக்களுக்குப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதுடன், பேருந்துக்காகக் காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகளும் பல்வேறு சிரமங்களுக்குள்ளாக நேரிடுகிறது. எனவே இந்தக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி மதுரை மாநகா் மாவட்ட பாமக சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு, மதுரை மாநகா் மாவட்ட செயலா் எஸ்.கே. தேவா் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கூடல்நகா் போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.