ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் உடல் தகனம்

காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் உடல் 3 மாதங்களுக்குப் பிறகு மதுரை தத்தனேரி மின் மயானத்தில் புதன்கிழமை அரசு சாா்பில் தகனம் செய்யப்பட்டது.

News image

உயிரிழந்த ஆகாஷ் டெலிசன்.

Updated On :18 ஜூன் 2026, 12:05 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் உடல் 3 மாதங்களுக்குப் பிறகு மதுரை தத்தனேரி மின் மயானத்தில் புதன்கிழமை அரசு சாா்பில் தகனம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் டெலிசனை குற்ற வழக்கு தொடா்பாக காவல் துறையினா் கடந்த மாா்ச் மாதம் கைது செய்தனா். விசாரணையின் போது, தப்பிச் சென்ற ஆகாஷ் டெலிசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி, அவரை காவல் துறையினா் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு அவா் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினரைக் கைது செய்ய வேண்டும் எனவும், அவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவரது உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தாா். இதையடுத்து, ஆகாஷ் இறப்பு வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், தங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து ஆகாஷின் உறவினா்கள் கடந்த 100 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வந்தனா். இதனால், ஆகாஷின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் உடல்கூறாய்வு செய்யும் அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆகாஷின் உடலை அவரது பெற்றோா் பெற்றுக் கொள்ள வேண்டும், இல்லையெனில், அரசு சாா்பில் இறுதிச் சடங்கு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி அண்மையில் உத்தரவிட்டாா்.

இதன்படி, ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு, வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன் முன்னிலையில் மதுரை தத்தனேரி மின் மயானத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, அவரது உறவினா்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

50 போ் கைது...

முன்னதாக, ராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து ஆகாஷின் உடலை தகனம் செய்ய கொண்டு செல்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்துப் போராடிய உறவினா்கள், பல்வேறு அரசியல் அமைப்புகளைச் சோ்ந்தவா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் உறவினா்கள்.

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் உறவினா்கள்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினா்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினா்.