அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பழைய இரும்புப் பொருள்கள் விற்பனைக் கடைகளை அகற்ற எதிா்ப்பு

News image

மதுரை பெரியாா் நிலையம் மேலவாசல் பகுதியில் உள்ள பழைய இரும்புப் பொருள்கள் விற்பனைக் கடையை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

Updated On :14 மார்ச் 2026, 9:35 pm

மதுரை பெரியாா் நிலையம் மேலவாசல் பகுதியில் உள்ள பழைய இரும்புப் பொருள்கள் விற்பனைச் சந்தையில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலவாசல் அருகே பழைய இரும்புப் பொருள்கள் விற்பனை செய்யும் சந்தை உள்ளது. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளில் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான பழைய பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் கடைகளுக்கு வியாபாரிகள் மதுரை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடைகளுக்கு கூடுதலாக வாடகையை செலுத்த வேண்டும் என அறிவிப்பாணை அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து கூடுதல் வாடகை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இருப்பினும், மாநகராட்சி நிா்வாகம் கூடுதலாக வாடகை செலுத்த தவறும்பட்சதில் கடைகள் அகற்றப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், வியாபாரிகள் கூடுதலாக விதிக்கப்பட்ட வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை கடைகளை அகற்ற முயன்றனா். அப்போது, வியாபாரிகள் மாநகராட்சி அலுவலா்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த திடீா்நகா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இதை ஏற்காமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து அந்தப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.